மனசாட்சிபடி ஓட்டளிக்க பிரசாரம்
வத்தலக்குண்டு: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் 50. இவர் தேர்தலில் பணம், பொருள் வாங்காமல் மனசாட்சிபடி ஓட்டளிக்கவும், ஆங்கில புத்தாண்டை கலாசாரம் கெடாமல் கொண்டாடவும், திருவிழா பண்டிகைகளை மது இல்லாமல் கொண்டாட கோரி பதாகைளை ஏந்தி நுாதன விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். நேற்று வத்தலக்குண்டு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.