உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயிலில் குவிந்த கூட்டம்

பழநி கோயிலில் குவிந்த கூட்டம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.ரோப்கார், வின்ச்சில் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முருகன் கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசைகளிலும் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் காத்திருந்தனர். மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அவர்கள் தரிசனம் செய்தனர். நெரிசலை கட்டுப்படுத்த குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையை அடைத்து கோயில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை