உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் காட்டுப்பன்றியால் சேதம்

பழநியில் காட்டுப்பன்றியால் சேதம்

நெய்க்காரப்பட்டி: பழநி, நெய்க்காரப்பட்டி அருகே ஐயர் தோட்ட பகுதியில் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்தன.பழநி சுற்றுவட்டார பகுதிகளில் விளை நிலங்களில் நெல், வாழை, மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று நெய்க்காரபட்டி அருகே உள்ள பெரியம்மாபட்டி ஊராட்சி ஐயர் தோட்ட பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் மக்காச்சோள பயிரை இரண்டு ஏக்கர் பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு காட்டுப்பன்றிகள் கூட்டமாக தோட்டத்திற்குள் புகுந்து, பயிர்களை சேதம் செய்தது. அடிக்கடி காட்டு விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. எனவே வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !