வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கேட்டால் பட்ஜெட் பற்றாக்குறை என்பார்கள். ஏன் டி ஆர் பி, ஜெகத், தொரை, ....... உள்ளிட்ட மலை முழுங்கி களிடமிருந்து வசூல் செய்து கொடுக்கலாமே.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தான் இது. இரண்டு திருட்டு திராவிட மாடல் ஆட்சியிலும் இதே நிலைதான் . நாங்கள் 1987 ல் பதிவு செய்து 24 ஆண்டுகள் கழித்து 2011ல் தான் மின் இணைப்பு கிடைத்தது. நாங்கள் விவசாயிகளுக்கு அதை செய்கிறோம் இதைச் செய்கிறோம் என்று வெற்று விளம்பரங்கள் மட்டுமே.
வீடியோ ஆட்சி அமைந்ததும் 2022 ஜனவரி மாதம் எனக்கு கடிதம் வந்தது அதில் 2017 ஆம் ஆண்டு பதிவு செய்திருந்த சுயநிதி மின் இணைப்பு விண்ணப்பத்தில் 50 ஆயிரம் கட்டினால் மின் இணைப்பு வழங்கப்படுவதாக ஒரு மாதத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்லி இருந்தது ஆவணங்களை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பித்த பிறகும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை இப்பொழுது 2025 ஆகிவிட்டது மூன்று வருடம் கழித்தும் மின் இணைப்பு வழங்கப்படாத அல்லது வழங்க முடியாத மின்சார வாரியம் ஏன் 2022 ஆம் ஆண்டு வெற்று கடிதத்தை அனுப்பி மின் இணைப்பு வழங்குவதாக நாடகமாடி விவசாயிகளை அலைக்கழித்தது என்று தெரியவில்லை
2011 ஆம் ஆண்டு பதிவு செய்த விண்ணப்பித்திருக்க கூட இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை நவம்பர் மாதம் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட கலெக்டர் முன்பு விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது அதில் ஒரு விவசாயி 2007 ஆம் ஆண்டு மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து இன்னும் வழங்கப்படவில்லை என்று புகாரோடு வந்திருந்தார் எல்லாமே ஒரு கண்தொடைப்பு தான்
மின் குறை தீர் மன்றம் புகார் அளிக்கலாம் அல்லது நுகர்வோர் மாவட்ட நீதி மன்றம் சென்றால் தீர்வு கிடைக்கலாம். நுகர்வோர் காண்டாக்ட் நெம்பர் கிடைத்தால் இலவச சேவை வழங்கலாம்.