உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமதுரை பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்

வடமதுரை பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை மண்டபடிதாரர் சரவணமூர்த்தியுடன் உடையாம்பட்டி கிராம மக்கள் வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் வந்து கொடியை கோயிலுக்குள் கொண்டு வந்தனர். கொடிமரம் முன்பாக ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து காலை 10:15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 13 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் இரவு அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடும், மண்டகபடிதாரர் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக ஆக.7 ல் திருக்கல்யாணம், 9ல் தேரோட்டம், 11ல் வசந்தம் முத்துபல்லக்கு வைபவம் நடக்கிறது. ஏற்பாட்டினை செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் தங்கலதா, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி