பொதுக்குழு கூட்டம்
பழநி: பழநி ரயில் உபயோகிப்பாளர் நல சங்கம் சார்பில் பொதுக் குழு கூட்டம் தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. புது தாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பங்கு பெற்ற அனைவருக்கும் விதைப்பந்துகள் வழங்கப்பட்டன. செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பாலாஜி, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டனர்.