பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சி
பழநி : பழநி பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான முறையில் நடந்து வர ஒளிரும் குச்சிகளை கோயில் நிர்வாகம் போலீசாரிடம் வழங்கியது.பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களை மாலை, இரவு நேரங்களில் சாலைகளில் வரும் வாகனங்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டிய குச்சிகளை கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ் போலீசாரிடம் வழங்கினார். இதனை போலீசார் பக்தர்களிடம் வழங்க உள்ளனர்.