உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூ ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை

பூ ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கேரளாவை சேர்ந்த பூ ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது அலி நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கி சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் முகமது அலிக்கு சொந்தமான நிறுவனங்களில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதலே நிலக்கோட்டையில் முகமது அலிக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம், கோடவுனில் கேரள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை