மேலும் செய்திகள்
ஆசிரியர் பணி நிறைவு; பள்ளியில் பாராட்டு விழா
23-Jan-2025
திண்டுக்கல் : கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் 5 ஆக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை 9 ஆக உயர்த்த வேண்டுமென தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது : பள்ளிக் கல்வி துறையில் இருக்கக்கூடிய அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் கள்ளர் சீரமைப்புத் துறையில் பெரும்பாலான பள்ளிகளில் 5 முதுகலை ஆசிரியர் பணியிடங்களே உள்ளன. இதனால் மாணவர்களை நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய இயலாத சூழல் நிலவுகிறது. இதனை சரி செய்ய தமிழக அரசு 5 முதுநிலை ஆசிரியர் என்ற நிலையிலிருந்து மேலும் 4 புதிய பணியிடங்களை உருவாக்கி 9 முதுகலை ஆசிரியர் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.
23-Jan-2025