உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பதக்கம் வென்ற ஸ்ரீ குருமுகி

பதக்கம் வென்ற ஸ்ரீ குருமுகி

தாடிக்கொம்பு:மதுரை சகோதயா பள்ளியில் பள்ளிகள் இடையே நடந்த எறிபந்து போட்டியில் மதுரை,திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 23 பள்ளிகள் பங்கேற்றன. 8 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றதில் 682 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தாடிக்கொம்பு ஸ்ரீ குருமுகி வித்யாஸ்ரம் பள்ளிமாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இவர்கள் 19 வயது மாணவர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் ,19 வயது பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் , 17 வயது,14 வயது ஆண்கள் , பெண்கள் பிரிவிலும் தங்க பதக்கங்கள் ,12 வயது ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம், 12 வயது பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றனர். தங்கப்பதக்கங்களை வென்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் திவ்யா, நிர்வாகி செந்தில் குமார், முதல்வர் ஷியாமளா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை