உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நத்தம்::த்தம் என்.பி.ஆர்., கல்வி குழுமத்தில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. என்.பி.ஆர்., கல்வி குழுமத்தின் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பானுசித்ரா முன்னிலை வகித்தார். மூன்றாமாண்டு தகவல் தொழில்நுட்பத்துறை மாணவி ஷாலினி வரவேற்றார். மூன்றாமாண்டு வணிகவியல்,கணினி பயன்பாட்டியல் துறை மாணவி சமீரா பேகம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். மதர்சாய்சி நிறுவனர் ஜே.சி.லாவண்யா ராஜா பேசினார். மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவி நிவேதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை என்.பி.ஆர்., கல்லுாரி நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி