உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் மாரியம்மன் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நத்தம் மாரியம்மன் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நத்தம் : -தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றானது நத்தம் மாரியம்மன் கோயில் கோவிலில் மாசி பெருந்திருவிழா நேற்று காலை மேளதாளம், தீ சட்டி பரிவாரங்கள், சிறப்பு பூஜைகளுடன் கோயில் முன்பு உள்ள திருக்கொடிமரத்தில் கொடியேற்ற துவங்கியது.இதையொட்டி கொடிமரம், நாணல்புல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம்பொரித்த கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் செயல்அலுவலர் சூரியன், உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல், திருக்கோவில் பூசாரிகள் கணேஷ், கோபாலகிருஷ்ணன், சின்னராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்,யுவராஜ், தினேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை நத்தம் அருகே உள்ள கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து சந்தன கருப்புசுவாமி கோயிலில் பக்தர்கள் ஒன்று கூடுவர். தொடர்ந்து அங்கிருந்து பக்தர்கள் தீர்த்த குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து செல்லப்படுவர்.பின்னர் அங்கு மஞ்சள் காப்பு கட்டி பக்தர்கள் 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா பிப். 27ல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோயில் பூசாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை