மேலும் செய்திகள்
பழநி பெருமாள் கோயில் ஆவணி விழா; செப்.2 துவக்கம்
27-Aug-2025
பாலசமுத்திரம்: பழந பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழாவில் தேரோட்டம் நடந்தது. முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் செப்.2 ல் ஆவணி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றம் நடைபெற்றது. செப். 8 மாலை திருமகள், மண்மகள் அகோபில வரதராஜ சுவாமிக்கு திருக்கல்யாணம், செப்.9 இரவு பாரிவேட்டை நடைபெற்றது. நேற்று (செப். 10 )காலை 6:30 மணிக்கு திருத்தேரில் திருமகள், மண்மகள்,அகோபில வரதராஜ பெருமாள் சுவாமி எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. தேரானது பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பாலசமுத்திரம் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரம்மோற்ஸவ திருவிழா நாட்களில் பவளக்கால் சப்பரம்,அனுமார் வாகனம், கருட வாகனம், தோளூக்கினியாள், சேஷ வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.12 விடையாற்றி உற்ஸவத்திற்கு பிறகு திருவிழா நிறைவடைகிறது.
27-Aug-2025