உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் உயர்நீதிமன்றத்தில் உறுதி

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் உயர்நீதிமன்றத்தில் உறுதி

நண்டுபட்டி : திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகலட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:நண்டுபட்டி ஊராட்சி குருநாதநாயக்கனுாரில் சேர்வைக்கூரான் குளம் நீர்நிலை உள்ளது. இதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: குறிப்பிட்ட சர்வே எண்களிலுள்ள குளம் நீர்நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அளவீடு செய்யப்படும். ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும். இவ்வாறு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள்: மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sathiesh
அக் 13, 2024 21:12

மதுரை மாவட்ட நீதிமன்றம், மதுரை மாநகராட்சி அலுவலகம், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவை அனைத்தும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டபட்டவையே


Ibrahim Ali A
அக் 10, 2024 13:27

தமிழ்நாட்டில் உள்ள அனைத்தும் நீர் பிடிப்பு பகுதியிலும் அக்கரமிப்புகள் அகற்ற வேண்டும் கோர்ட் இதற்கு உறுதியாக இருக்க வேண்டும் அதாவது நீதிமன்றம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி