ரோடு மறியல்: 22 பேர் கைது
திண்டுக்கல்: தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனை போலீசார் கைது செய்ததை கண்டித்து திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழ்புலிகள் கட்சி சார்பில் ரோடு மறியல் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவரசன் தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.* பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தென் மண்டல செயலாளர் திருவள்ளுவர் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் இரணியன் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.