சாதித்த பி.வி.பி., பள்ளி
பழநி: இந்திய அளவிலான 13 வயதுக்கு உட்பட்ட இறகு பந்து போட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது . இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் 800க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பழநி சண்முக நதி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் சரண் வெண்கல பதக்கம் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். இவரை பள்ளி செயலாளர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் பாராட்டினர்.