சிறுமலையாறு நீர்த்தேக்கம்
கொடைரோடு,: கொடைரோடு ராஜதானிகோட்டை சிறுமலையாறு நீர்த்தேக்கத்தின் மூலம் சுமார் 315 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தற்போது பெய்யும் தொடர் மழையால் இந்த நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. பாசன கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.