உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி

வடமதுரை : திருச்சி பாலக்கரையை சேர்ந்த 10 பேர் வேலைவாய்ப்புக்காக திருநெல்வேலியில் தேர்வு எழுதிவிட்டு காரில் ஊர் திரும்பினர். திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்தபோது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் அடுத்தடுத்து சென்ற இரு டூவீலர்கள் மீது மோதியது. முதல் டூவீலரில் சென்ற நிலக்கோட்டை பள்ளப்பட்டியை சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் காயமடைந்தனர். அடுத்த டூவீலரில் சென்ற திருச்சி மாவட்டம் வையம்பட்டி மொட்டையம்பட்டி பூ வியாபாரி பெரியசாமி 60, இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை