விட்டு விட்டு பெய்த மழை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று மதியத்திற்கு மேல் தொடங்கிய மழை விட்டு விட்டு இரவு வரை நீடித்தது.திண்டுக்கல்லில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. மதியம் 2:30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 15 நிமிடத்திற்கு மேல் விடாது பெய்தது. தொடர்ந்து 3 மணி முதல் சீரான இடைவெளியில் துாரல் விழுந்த வண்ணமே இருந்தது. விட்டு விட்டு பெய்த மழை இரவு வரை நீடித்தது. திருச்சி ரோடு நேருஜி ரவுண்டானா, நாகல்நகர், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடியே சென்றனர்.