மிரட்டும் மின் டிரான்ஸ்பார்மர்கள்...அசட்டையில் அதிகாரிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் மின் சப்ளைக்காக ஆங்காங்கு குறிப்பிட்ட இடங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.இவைகளின் துாண்களில் உள்ள சிமென்ட் பூச்சு பெயர்ந்து அதன் கான்கிரீட் கம்பிகள் துருபிடித்த நிலையில் வெளியில் தெரிகின்றன. விபத்து அச்சத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் போக்குவரத்து உள்ள ரோட்டோரம், மக்கள் அதிகம் நடமாடும் தெருக்களில் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. இதனை பராமரிக்க மின் துறையினர் நடவடிக்கை அவசியமாகிறது.