மேலும் செய்திகள்
'கொடை'யில் குவிந்த பயணிகள் ஏரிச்சாலையில் நெரிசல்
22-Dec-2024
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானல்: கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் ,அரையாண்டு பள்ளி விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரு வாரத்திற்கு முன் தொடர் மழை பெய்த நிலையில் தற்போது மழை ஓய்ந்து ரம்யமான சீதோஷ்ண நிலை நீடிக்கிறது. சில்லிடும் காற்றால் கடுங்குளிர் நிலவுகிறது. குளு குளு நகரில் உள்ள பிரையன்ட் பூங்கா,ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை பயணிகள் ரசித்தனர்.குதிரை,சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்தனர். மதியம் 3:00 மணிக்கு பனியின் தாக்கம் அதிகரித்து குளிர் அதிகரித்தது. ஆயத்த ஆடைகளை அணிந்து சுற்றுலாப் பயணிகள் , பொதுமக்கள் நடமாடினர்.
22-Dec-2024