மேலும் செய்திகள்
'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
29-Sep-2024
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையைடுத்து நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ்வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்களை பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரியும். ஏரியில் படகு சவாரி செய்தும் பயணிகள் மகிழ்ந்தனர். மதியம்லேசான சாரல் மழை பெய்தது. நகரில் தரையிறங்கிய மேக கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது.
29-Sep-2024