சிறுமலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் சிறுமலையில் 18வது கொண்டை ஊசி வளவு பகுதியில் இன்று கனமழையால் திடீரென 15 ஆண்டுகளுக்கு பழமையான பெரிய மரம் ரோட்டில் சரிந்தது. அங்குள்ள ஊராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் சேர்ந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக இதனால் சிறுமலை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.