உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  டூவிலர் மீது கார் மோதி பெண் பலி

 டூவிலர் மீது கார் மோதி பெண் பலி

ஒட்டன்சத்திரம்: ஆத்தூர் கலிக்கம்பட்டியை சேர்ந்த விஜய், இருசக்கர வாகனத்தில் மனைவி கவிதா 24, குழந்தைகள் இருவருடன் பழநிக்கு சென்றார். ஒட்டன்சத்திரம்- - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் சின்ன கரட்டுப்பட்டி பிரிவு அருகே சென்ற போது காஞ்சிபுரம் ஆதம்பாக்கம் சரஸ்வதி நகரை சேர்ந்த அதுல் 33, ஓட்டி சென்ற கார், டூவீலர் பின்னால் மோதியது. இவ்விபத்தில் கவிதா பலியானார். குழந்தைகள் கிருஷிகா 6, மகிலினி 3. காயம் அடைந்தனர். காரில் பயணித்த கோபாலகிருஷ்ணன், பார்கவி, சாய்அனிருத், வைஸ்ணவி காயம் அடைந்தனர்.ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை