ரயில் மோதி வாலிபர் பலி
ரயில் மோதி வாலிபர் பலிஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷனை அடுத்த வெண்டிபாளையம் ரயில்வே கிராசிங் அருகே வாலிபர் ஒருவர் ரயில் மோதி உடல் துண்டாகி இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த வாலிபருக்கு, 35 வயது இருக்கும். யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.