உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு கலை கல்லுாரியில் ௪௮வது பட்டமளிப்பு விழா

ஈரோடு கலை கல்லுாரியில் ௪௮வது பட்டமளிப்பு விழா

ஈரோடு : ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 48வது பட்டம-ளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை வோல்டெக் நிறுவனங்களின் தலைவர் உமாபதி, பட்டங்களை வழங்கி பேசினார். விழாவில், 1,048 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர். பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.விழாவுக்கு நிறுவனத்தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் பாலுசாமி விழாவை தொடக்கி வைத்தார். முதல்வர் சங்கரசுப்ரமணியன் வரவேற்றார். துணைத்த-லைவர் மாணிக்கம், சந்திரசேகரன், பாலசுப்ரமணியம் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இயக்குனர் வெங்கடாசலம் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.வெங்கடாசலம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ