உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது

கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், 39; லாரி கிளீனர். நேற்று முன்தினம் நள்ளி-ரவில் பண்ணாரி கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்-போது பைக்கில் வந்த இருவர், கத்தியை காட்டி கொன்று விடுவ-தாக மிரட்டி, வெங்கடேஸ்வரன் வைத்திருந்த, 2,000 ரூபாயை பறித்து தப்பினர். சிறிது துாரம் சென்ற நிலையில் அவர் சத்தமி-டவே, அருகிலிருந்தவர்கள் மற்றும் செக்போஸ்ட் போலீசார் இரு-வரையும் பிடித்து சத்தி போலீசில் ஒப்படைத்தனர். விசார-ணையில் கொமராபாளையம் பிரபாகரன், 29; வடக்குபேட்டை வடிவேல், 27, என தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ