உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீட் தேர்வுக்கு அரசு பள்ளியில் பயிற்சி; 310 மாணவர்கள் தயார்

நீட் தேர்வுக்கு அரசு பள்ளியில் பயிற்சி; 310 மாணவர்கள் தயார்

ஈரோடு:மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 5ல் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் எட்டு மையங்களில், 4,700 மாணவ, மாணவியர் தேர்வெழுதவுள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று நீட் தேர்வு எழுதவுள்ள, 236 பேருக்கு, கடந்த சில மாதங்களாக சிறப்பு வகுப்பு நடந்தது.இதேபோல் ஈரோட்டில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் (எலைட்) நீட் தேர்வுக்காக பிரத்யேகமாக பயிற்சி எடுத்து வரும், 74 மாணவ, மாணவியர் என, 310 பேர் தேர்வெழுதுகின்றனர். நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நாளை நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ