உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீட் தேர்வில் 150 பேர் ஆப்சென்ட்

நீட் தேர்வில் 150 பேர் ஆப்சென்ட்

ஈரோடு: நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் எட்டு மையங்களில் தேர்வு நடந்தது.வழக்கம்போல் சோதனைகளுக்கு பின் மாணவ, மாணவியர் தேர்வறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மொத்தம் எட்டு மையங்களில், 4,747 மாணவ, மாணவியர் நீட் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர்.இதில், ௧௫௦ பேர் ஆப்சென்ட் ஆன நிலையில், ௪,௫௯௭ பேர் பங்கேற்றனர்.தேர்வுக்கு முன்னதாகவே வந்த மாணவ, மாணவியர் தாங்களாகவே பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டு, உற்சாகத்துடன் தேர்வெழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ