உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்

கஞ்சா வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்

ஈரோடு: திருச்சி, பாண்டமங்கலம், முஸ்லிம் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான், 48; கவுந்தப்பாடியில் பவா கல்யாண மண்-டபம், சம்பளகாடு பகுதியில் வசிக்கிறார். இதேபோல் கடலுார், புலியூர் வசனன்குப்பம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சிவபிரகாசம், 48; கஞ்சா விற்ற இருவரையும் கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் மூலம் கோபி மதுவிலக்கு போலீசார் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசீலனை செய்து இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்-கப்பட்டனர்.விபத்தில் இளைஞர் பலிசத்தியமங்கலம், பிப். 24-சத்தியமங்கலத்தை அடுத்த டி.ஜி.புதுாரை சேர்ந்தவர் சஞ்சய், 23; யமஹா ஆர்-15 பைக்கில், புளியம்பட்டியிலுள்ள தனது நண்-பரை பார்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தார். செண்பகபுதுார் அருகே கோபி சாலையிலிருந்து கோவை சாலையில், பைக் மீது லாரி மோதியது. இதில் சஞ்சய் படுகாய-மடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்ட நிலையில் இறந்தார். லாரி டிரைவரான ஈரோடு, மூலப்பா-ளையத்தை சேர்ந்த பரமசிவத்திடம், சத்தி போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !