உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காளிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

காளிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து, காளிங்கராயன் பாசனத்திற்கு, 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் முதல்போக நன்செய் பாசனத்துக்கு கடந்த ஆக.,15 முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் அரக்கன் கோட்டை-தடப்-பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்திற்கு பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே, காளிங்கராயன் பாசனத்திற்கு திறக்கப்பட்ட, 200 கன அடி தண்ணீர் கடந்த ஆக.,30 முதல் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை, காளிங்கராயன் பாசனத்திற்கு முதற்-கட்டமாக, 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் மாலை, 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்றைய நிலவ-ரப்படி, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 1,198 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம், 96.34 அடி; நீர் இருப்பு, 25.9 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 750 கன அடி தண்ணீர்; கீழ்பவானி பாசனத்திற்கு, 2,300 கன அடி மற்றும் குடி-நீருக்காக, 100 கன அடி என மொத்தம், 3,350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !