உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம், தாராபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

காங்கேயம், தாராபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

காங்கேயம்: காங்கேயம் அருகே வீரணம்பாளையம் சுற்று வட்டார பகுதி-களில், கஞ்சா விற்பனை நடப்பதாக, காங்கேயம் போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிகளில் சோதனை செய்தனர். இதில் ஸ்கார்பியோ காரில் கஞ்சாவை விற்-பனைக்காக வைத்திருந்த, காங்கேயம், முள்ளிபுரத்தை சேர்ந்த பூபதி, 33, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 150 கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. தாராபுரத்தில்....தாராபுரம்-காங்கேயம் சாலையில், தாராபுரம் மதுவிலக்கு போலீசார் நேற்று முன் தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்-டனர். வட்டமலை அருகே ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த, ௩௨ வயது வாலிபர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவனை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி