போதைக்கு வலி நிவாரணி மாத்திரை விற்ற 2 பேர் கைது
ஈரோடு, ஈரோட்டில், போதை மாத்திரை விற்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் போதைக்கு வலி நிவாரணி மாத்திரை விற்பதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நந்தகுமார், 24, வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தியது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். 20 மாத்திரை கைப்பற்றப்பட்டது. இதேபோல், கருங்கல்பாளையம் சக்திவேல் மகன் மதன மாணிக்கம், 19, என்பவரை கைது செய்து, நான்கு வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் ஈரோடு கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.