மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் கடனுதவி
13-May-2025
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, கருணை அடிப்படையில் வேலை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக, 230 மனுக்கள் ஏற்கப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், 5 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டி சீர் மரபினர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மொடக்குறிச்சி தாலுகாவை சேர்ந்த, இருளர் பழங்குடியினருக்கு வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
13-May-2025