மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கில் மூவர் மனு தாக்கல்
11-Jan-2025
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் கடந்த, 10ல் துவங்கியது. அன்றைய தினம், தேர்தல் மன்னன் பத்மராஜன், நுார்முகம்மது, கரூர் விநாயகம் என மூன்று பேர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தனர்.இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று, சமூக ஆர்வலர்களான சேலம், தாதகாபட்டி சமூக ஆர்வலர் ராஜசேகர், 67; ஈரோடு 46 புதுார் கோபாலகிருஷ்ணன், 33, சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தனர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் சோழந்துார் கஜினி முகம்மது என்ற பானைமணி, 77, என்பவர், மஞ்சள் குலை, இலையை பானையில் வைத்து, தலையில் சுமந்தபடி வந்து மனுத்தாக்கல் செய்தார். இவர், 23வது முறை மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.தர்மபுரியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஆனந்த், 40; ஈரோடு, மரப்பாலம், வாசனை திரவிய வியாபாரி முகம்மது கைபில், 51; சென்னையில் பேப்பர் வியாபாரம் செய்யும் இசக்கிமுத்து, 50, என ஆறு பேர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தனர்.அதே சமயம் முதல் நாள் மனுத்தாக்கல் செய்த நுார்முகம்மது, கூடுதலாக ஒரு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து மனுத்தாக்கல் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்தது.
11-Jan-2025