உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கால்நடை சந்தைக்கு 800 மாடுகள் வரத்து

கால்நடை சந்தைக்கு 800 மாடுகள் வரத்து

ஈரோடு : கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு, 800 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாடுகளை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.சந்தைக்கு, 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் மதிப்பிலான, 70 கன்றுகள், 25,000 ரூபாய் முதல், 70,000 ரூபாய் மதிப்பிலான, 300 எருமை மாடுகள், 25,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 80,000 ரூபாய்க்கு மேலான விலையில், 100க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்தன.தென்மாநிலங்களில் பரவலாக மழை பெய்வதாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளில் ஏற்பட்ட தளர்வாலும் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்கி சென்றனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ