உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பையில் 90 கஞ்சா சாக்லெட் பறிமுதல்

பையில் 90 கஞ்சா சாக்லெட் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் ஆவின் பூத் அருகே, கேட்பாரற்ற நிலையில் நேற்று முன் தினம் ஒரு பை கிடந்தது. தகவலறிந்து சென்ற ஈரோடு மதுவிலக்கு போலீசார் பையை திறந்து பார்த்தனர். அதில், 90 கஞ்சா சாக்லெட் இருந்தது. எடை, 480 கிராம். போலீசார் பறிமுதல் செய்தனர். பையை விட்டு சென்றது யார்? என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !