உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 215 மனு ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 215 மனு ஏற்பு

ஈரோடு, அக். 15-ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆதார் அட்டை, மகளிர் உரிமை தொகை, வங்கி கடனுதவி என்பது உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 215 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்காக, அம்மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை