மீண்டும் ஆகாயத்தாமரை பிடியில் சூரம்பட்டி அணைக்கட்டு வளாகம்
ஈரோடு: ஈரோட்டில் பெரும்பள்ளம் ஓடை நடுவே சூரம்பட்டி அணைக்-கட்டு உள்ளது. அணைக்கட்டில் இருந்து பிரியும் நஞ்சை ஊத்துக்-குளி வாய்க்காலுக்கும் தண்ணீர் செல்கிறது. அணைக்கட்டில் வழியும் உபரி நீர் காவிரி ஆற்றில் கலக்கிறது. பல ஆண்டாக அணைக்கட்டில் ஆகாயத்தாமரை படர்ந்து நீரோட்டத்துக்கு தடை-யாக அமைந்தது. இதனால் போதிய நீரை சேமிக்க முடியாத நிலையும், மழை காலத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடு-களில் மழை நீரும் புகுந்தது. இந்நிலையில் தனியார் அமைப்பு சார்பில், சமீபத்தில் ஆகாயத்தாமரை செடிகள் முற்றிலும் அகற்-றப்பட்டு, அருவி போல் அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வெளியேறியது. நேற்று முன்தினம் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை பெய்தது. இதில் பெரும்பள்ளம் ஓடையில் இருந்த ஆகாயத்தாமரை அடித்து வரப்பட்டு சூரம்-பட்டி அணைக்கட்டில் தேங்கியது. இதனால் மீண்டும் ஆகாயத்-தாமரை பிடியில் சிக்கி, பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது.