உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆற்றில் மிதந்த உடல் அடையாளம் தெரிந்தது

ஆற்றில் மிதந்த உடல் அடையாளம் தெரிந்தது

ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கடந்த, 31ம் தேதி மாலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஈரோடு கருங்கல்பாளையம் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்த சீனிவாசன், 48, எலக்ட்ரீசியன், திருமணம் ஆனவர் என்பது தெரிந்தது. இரு ஆண்டாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மனைவியை சில மாதங்கள் வசித்த நிலையில், உறவினர்கள் மனைவியுடன் சேர்ந்து வாழ செய்தனர்.இந்நிலையில் சீனிவாசன், காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்