போலீஸ் ஸ்டேஷன் அருகில் கார் கண்ணாடி உடைப்பு
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டியில் சத்தி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. இதன் அருகே அரசு துவக்கப்பள்ளி காம்பவுண்ட் சுவர் முன் அப்பகுதியில் கடை நடத்துபவர்கள் கார்களை நிறுத்துவது வழக்கம். நேற்று காலை வந்து பார்த்தபோது இரு கார்களின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.