அனுமதி பெறாமல் வெடி தயாரித்தவர் மீது வழக்கு
பெருந்துறை: பெருந்துறை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்-முகம், 38; உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வாணவேடிக்கை பட்டாசு தயாரித்துள்ளார். இதுகுறித்து பட்டகாரன்பாளையம் வி.ஏ.ஓ., புவனேஸ்வரி, பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்-தனர். சண்முகம் மீது ஏற்கனவே பெருந்துறை மற்றும் திங்களூர் போலீசில், வெடிமருந்து தொடர்பான வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.