சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 85 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு
ஈரோடு ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளர்கள், தேசிய பண்டிகை விடுமுறை தினமான சுதந்திர தின நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு செய்தனர்.தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா அல்லது அன்று பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 தினங்களுக்குள் ஒரு நாள் மாற்று விடுப்பு வழங்குவதாக நிர்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவத்தை தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி ஆய்வர் அலுவலகத்தில் சமர்பித்து, முன் அனுமதி பெற்று செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர்.மொத்தம், 47 கடை, நிறுவனங்கள், 45 உணவு நிறுவனங்கள், 8 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என, 100 நிறுவனங்களில் நடந்த ஆய்வில், 85 நிறுவனங்களில் நேற்று விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்க, 24 மணி நேரத்துக்கு முன் அறிவிப்பு வழங்கி அதன் நகலை, தொழிலாளர் துறையில் ஒப்புதல் பெறாமலும் இருந்தது தெரியவந்தது. அந்நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.