உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொ.ம.தே.க., நிர்வாகிகளை தாக்கியதாக புகார்

கொ.ம.தே.க., நிர்வாகிகளை தாக்கியதாக புகார்

ஈரோடு: தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சி, அறச்சலுாரை அடுத்த ஓடாநிலையில் நேற்று நடந்தது. இதற்காக வந்த கொ.ம.தே.க., பொள்ளாச்சி நிர்வாகிகள் ரமேஷ், 42, கார்த்தி, விஸ்வநாதனை, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை (யுவராஜ்) நிர்வாகிகள் தாக்கியுள்ளனர். தகவலறிந்த போலீசார் இருதரப்பினரையும் தடுத்து அப்புறப்படுத்தினர். மூன்று பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொள்ளாச்சி மாவட்ட செயலாளர் விவேகானந்தன், அறச்சலுார் போலீசில் புகார் அளித்துள்ளார். இதில் மூன்று பேரை தாக்கியவர்களை, கைது செய்ய வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை