ஓட்டுநர் சங்கம் தொடக்கம்
சென்னிமலை: சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் அருகில், புதிதாக சென்னிமலை ஆண்டவர் கார், ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் புதிதாக துவங்கப்பட்டது. சங்க பெயர் பலகையை சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் திறந்து வைத்தார். துணை தலைவர் சவுந்தர்ராஜன், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.