| ADDED : அக் 07, 2011 01:03 AM
ஈரோடு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு, 'சப்தஸ்வரங்கள்' இசைப்பள்ளி
சார்பில், ஈஸ்வரமூர்த்தி மஹாலில், பாட்டு, ஓவியப் போட்டி நடந்தது.பல்வேறு பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஓவியப்போட்டியில் சி.எஸ். அகாடமி பள்ளி, லக்காபுரம் உயர்நிலைப்பள்ளி,
பாட்டுப் போட்டியில் கோபி சாரதா பள்ளி, ஜேசீஸ் பள்ளி மாணவ, மாணவியர்
அதிகளவில் பரிசுகளை தட்டிச் சென்றனர்.பரிசளிப்பு விழாவில், வேளாளர் கல்வி
நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன் ஆகியோர்
பரிசு வழங்கினர். இன்ஜினியர் குமாரசாமி, கனரா வங்கி முதுநிலை மேலாளர்
மதிவாணன், பாடகர் மீனா வெங்கட்ரமணன், அரசு இசைப்பள்ளி தியாகராஜன் ஆகியோர்
பங்கேற்றனர். தியாகி சண்முககாந்தி பேசினார்.பள்ளி இயக்குனர் பாலமுரளி நன்றி கூறினார்.