உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூம்பு ஒலி பெருக்கி ஈரோட்டில் 7 பேர் கைது

கூம்பு ஒலி பெருக்கி ஈரோட்டில் 7 பேர் கைது

ஈரோடு: கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை வைத்து பிரச்சாரம் செய்ததாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேர் தேர்தல் விதி மீறல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. பிரச்சாரத்தின் போது, அரசியல் கட்சி பிரமுகர்கள் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு இடையூறு தரும் விதமாக பிரச்சாரம் செய்யக்கூடாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பிரச்சாரம் செய்வோர் மீது ஈரோடு மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஈரோடு பெரிய சேமூரை சேர்ந்த ஆனந்தன்(29), பெருந்துறை அருகே கம்புளியாம்பட்டி மோகன்ராஜ்(28), சோலார்புதூர், பாலுசாமி நகர் காதர் அலி(32), திண்டல், புதுகாலனி அலாவுதீன் சித்திக்(23), அதேபகுதியை சேர்ந்த தனசேகர்(24), வில்லரசம்பட்டி சண்முகசுந்தரம்(52), நெருஞ்சிப்பேட்டை கார்த்திகேயன்(25) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை