உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி, மகளை அழைக்க வந்த ஈரோடு வாலிபர் சாவு

மனைவி, மகளை அழைக்க வந்த ஈரோடு வாலிபர் சாவு

ஈரோடு, ஈரோடு, காளமேகம் வீதியை சேர்ந்தவர் தமிழரசன், 34; தனியார் நிறுவன சேல்ஸ்மேன். இவரின் மனைவி கவுசல்யா தேவி, 29; தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தமிழரசன் குடும்பத்துடன், சென்னை, ஆவடியில் வசித்து வந்தார். குழந்தைகளுடன் ஈரோட்டில் உள்ள மாமனார் வீட்டுக்கு கவுசல்யா தேவி வந்திருந்தார். இந்நிலையில் மனைவி, குழந்தைதளை அழைத்து செல்ல, தமிழரசன் கடந்த, 31ல் ஈரோடு வந்தார். வீட்டருகில் நடந்து சென்றவர் திடீரென மயங்கி விழுந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை