இரு சக்கர வாகனங்கள்மோதி விவசாயி பலி
புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அடுத்துள்ள நல்லுாரை சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியம், 67. இவர், நேற்று முன்தினம் எக்ஸ்.எல். சூப்பர் மொபட்டில், சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நல்லுார் தனியார் பள்ளி அருகே, வலது புறம் திரும்ப முயற்சித்த போது, எதிரே வந்த டியோ மொபட் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியத்தை, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார்.புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.