உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நேந்திரன் வாழைக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை

நேந்திரன் வாழைக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை

புன்செய்புளியம்பட்டி: நேந்திரன் வாழைக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரத்தில் பெரியகள்ளிப்பட்டி, நால்ரோடு, கொத்தமங்கலம், அம்மாபாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதில், 60 சதவீதம் நேந்திரன் ரகம் மற்றும் கதளி ஜி-9 ரகமும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள், அதிக அளவில் கேரளாவிற்கும், அடுத்தபடியாக மும்பைக்கும் செல்கிறது. நேந்திரன் வாழை, கேரளா மார்க்கெட்டை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நல்ல விலை கிடைத்து வருவதால், சுற்றுவட்டார விவசாயிகள் நேந்திரன் வாழை பயிரிடுவதில், ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான அறுவடை துவங்கி நடந்து வருகிறது. துவக்கத்தில், ஓரளவு நல்ல விலை கிடைத்தது. இதன் உற்பத்தி பரவலாக அதிகரித்ததால், விலை வீழ்ச்சி அடைந்ததுள்ளது. கடந்த மாதம் கிலோ, 45 ரூபாய்க்கு விற்ற நேந்திரன் தற்போது கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வாழை விவசாயிகள் கூறியதாவது:நேந்திரன் வாழைத்தார்களை, வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கு வந்து வெட்டிச் செல்கின்றனர். கடந்த மாதம், நேந்திரன் வாழைத்தார் கிலோ, 35 ரூபாய் முதல், 45 ரூபாய் வரை விலை போனது. இதனால் ஒரு வாழைத்தாருக்கு, 600 ரூபாய் வரை விலை கிடைத்தது. தற்போது, ஒரு கிலோ, 20 ரூபாய் வரை விலை போகிறது. ஆண்டு முழுவதும், வாழை மரங்கள் காற்றில் விழாமல் பாதுகாத்தோம். கிலோ, 30 ரூபாய்க்கு மேல் விற்றால் மட்டுமே, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை